Sunday, July 26, 2015

கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றி மூத்த குடி

புறப்பொருள் வெண்பா மாலைன்னு ஒரு இலக்கண நூல் எட்டாம் நூற்றாண்டு CE கரந்தைப் படலம் 35
பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகலக்
tongue emoticon"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றி மூத்த குடி" tongue emoticon
முதல் டுப்பாகூர் :- அவனுங்க சொன்னது "கல்தோன்றா" இங்கே இருப்பதோ "கல்தோன்றி"ன்னு இருக்கு !
இரண்டாவது டுபாகூர் :-கல்தோன்றா முன் எப்படி ஒரு மொழி உருவாக முடியும் ? சரி சாய்ஸில் விடுவோம் !
இங்கே கல் என்றால் என்ன என்பதை எதுமே விளக்காமல் "கல்தோன்றா" அல்லது "கல்தோன்றி" என்பதை எப்படி ஒரு வடிவமாக\பொருள் எடுத்துக்க முடியும் ?
"கல்" க்கு மலை என்ற பொருளும் உண்டு !
"மண்" க்கு வயல் என்ற பொருளும் உண்டு !
மலை தோன்றி வயல் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குட்டின்னு வச்சிப்போம்
மலை இருந்தும் விவசாயம் செய்யும் அளவுக்கு பக்குவபடாத மனித குழுவுக்கு தெரிந்ததெல்லாம் வேட்டையாட மட்டுமே தெரியும் வாளோடு (கூரிய கற்கள் என்றே எடுத்துக்க முடியும் தன் தேவைக்காக உணவை உற்பத்தி செய்யும் முன் அவனின் குணாதிசியம் வேட்டையாடுதல் பின்பு விவசாயம் - சேமித்து வைத்தல்-பண்டம் மாற்றுதல்-தனது இருப்பிடத்தின் வளையத்தை பெரியதாக ஆகுதல்-Evolution ப்ராசஸ் )
இதில் மொழிக்கு என்ன வேலை இருக்கு இந்த செய்யுளில் ?
நிலம் சார்ந்த தகவலை தான் ரிஜிஸ்டர் செய்யப்பட்டிருக்கு !
மாதவி பந்தல்

No comments:

Post a Comment